ஏ.டி.எம் -ல் கேட்பாரற்று கிடந்த பை… அப்படி என்ன இருக்கு அதில்…? பையை போலீசில் ஒப்படைத்த வாலிபர்… பொன்னாடை அணிவித்து எஸ்.பி. பாராட்டு…!!
SeithiSolai Tamil June 08, 2025 04:48 AM

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி என்ற பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ்(22). இவர் கடந்த 3-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஐ.ஓ.பி ஏ.டி.எம் -ல் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு பை கிடந்தது.

அந்த பையை எடுத்து பார்த்தபோது அதில் ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் பணம் இருந்தது. அதனை பார்த்து அல்போன்ஸ் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த பணத்தை அவர் காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்தப் பணத்தை நம்பிநத்தலைவன்பட்டயத்தை சேர்ந்த இசக்கிரமேஷ்(31) என்பவர் ஏ.டி.எம் -ல் தவறவிட்டது தெரியவந்தது. எனவே அவரை தொடர்பு கொண்ட போலீசார் காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவருடைய பணத்தை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அறிந்த மாவட்ட எஸ்.பி ஏ.டி.எம் -ல் கேட்பாரற்று கிடந்த பையை ஒப்படைத்த அல்போன்ஸை நேரில் வரவழைத்து அவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.