தமிழகத்தில் பி.இ., பி.டெக். படிப்புக்களுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மே 7ம் தேதி தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே 15000 மேற்பட்ட விண்ணப்பங்கள் குவியத் தொடங்கின. தினமும் சராசரியாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஜூன் 6ம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் விண்ணப்பப்பதிவு நிறைவு பெற்றது. அதன்படி, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்காக 3,02,374 மாணவர்கள் விண்ணப்பித்து இருப்பதாக பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்தவும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூன் 9 ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு ஜூன் 11ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். ஜூன் 20ம் தேதிவரை அவா்களின் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் சரிபாா்க்கப்படும். இப்பணி முடிந்து ஜூன் 27ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு கலந்தாய்வு தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும்.
விளையாட்டு வீரா்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கு சான்றிதழ்களை சரிபாா்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர்களுக்கான கலந்தாய்வு அட்டவணை விவரங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.