வெளிநாட்டுக்கு செல்ல இருந்த கொத்தனார்…. ஆசையாக மனைவி மற்றும் மகள்களுக்கு பிரியாணி வாங்க சென்ற போது ஏற்பட்ட விபரீதம்… இப்படியா ஆகணும்..!!!
SeithiSolai Tamil June 07, 2025 03:48 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சான் கோடு பகுதியில் முரளி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளது. விடுமுறைக்கு சொந்த ஊருக்கு திரும்பிய முரளி இன்று வெளிநாட்டுக்கு செல்வதாக இருந்தது. இந்நிலையில் நேற்று மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கி தருவதற்காக வீட்டில் இருந்து மார்த்தாண்டம் சென்றுள்ளார்.

அதன் பின் மார்த்தாண்டத்தில் இருந்து பிரியாணி வாங்கிவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோதி அவர் மீது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முரளி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அந்த பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.