சென்னையில் தனது காரை மகனின் நண்பர்கள் ஏமாற்றி அடமானம் வைத்துவிட்டு மீட்டு தராமல் ஏமாற்றுவதாக துணை நடிகை மணிமேகலை குற்றம் சாட்டியுள்ளார். அதாவது நண்பன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் மணிமேகலை. இவரது மகன் கண்ணனிடம் அவரது நண்பர் ரத்தினவேல் பாண்டியன் 6 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.
தஞ்சாவூரில் மணிமேகலையின் காரை அடமானம் வைத்து மேலும் 5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளார். பணத்தையும், காரையும் திருப்பி தராததால் இதுகுறித்து ரத்தினவேல் பாண்டியன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மாதவன், ராஜா ஆகியோர் மீது காவல் நிலையத்தில் மணிமேகலை புகார் அளித்தார். ஆனால் ஒரு வருடம் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மணிமேகலை குற்றம் சாட்டியுள்ளார்.