நாளை நடைபெறவுள்ள ஐ.பி.எல். இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது..?
Seithipunal Tamil June 03, 2025 07:48 AM

உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐ .பி.எல் போட்டியின் 18-வது தொடரில் 10 அணிகள் பங்கேற்றன. நாளையுடன் போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடையவுள்ளது. 

கடந்த மார்ச் 22-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை இரவு 07.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில்  18 ஆண்டுகளுக்கு பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அந்த கனவு கோப்பைக்கான பல பரீட்சை நடத்தவுள்ளது. 

இந்நிலையில் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி நடைபெறும் நேரத்தில் அகமதாபாத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அகமதாபாத் வானிலைத்துறை கணித்துள்ளது.

குறிப்பாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையிலான தகுதி சுற்று 02 ஆட்டம் மழை காரணமாக 02.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.