இந்த படம் நாளை தமிழகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தற்போது தக்லைப் திரைப்படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்துள்ளது.அதாவது தஹ்லைப் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சட்டவிரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. அத்துடன் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.