பெரும் அதிர்ச்சி…! திடீரென இடிந்து விழுந்த பாலம்… ரயில் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு…!!!
SeithiSolai Tamil June 03, 2025 02:48 PM

ரஷ்யாவின் பேல்கோரோட் பிராந்தியம் கிலிமோவ் நகரில் இருந்து ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் தலைநகர் மாஸ்கோ நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பிரையன்ஸ்க் என்று இடத்தில் சென்று கொண்டிருந்தபோது மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் பாலத்தின் கான்கிரீட் சுவர்கள் தண்டவாளத்தின் மீது விழுந்தது.

இதனை எதிர்பாராமல் சென்ற ரயில் இடிபாடுகள் மீது மோதி தடம் புரண்டது. இந்த சம்பவத்தில் ரயில் டிரைவர் உட்பட 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.