குறவர் சமுதாய மடம் ஆக்கிரமிப்பு ..வனவேங்கைகள் கட்சியினர் போராட்டம்!
Seithipunal Tamil June 05, 2025 09:48 AM

பழனி சன்னதி வீதியில் உள்ள குறவர் சமுதாய மடம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதை கண்டித்து வனவேங்கைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பழனி சன்னதி வீதியில் உள்ள குறவர் சமுதாய மடம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பு செய்யப்பட்டு உள்ளதை கண்டித்து,வனவேங்கைகள் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட குழு சார்பில், பழனி மின்வாரிய அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் உலகநாதன், வள்ளி பெருந்தகை பாசறை மாவட்ட செயலாளர் கோகிலவாணி, துணை செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி தலைவர் பொ.மு.இரணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றி பேசினார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தின்போது, பழனி சன்னதி வீதியில் உள்ள குறவர் சமுதாய மடம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பு செய்யப்பட்டு உள்ளதை கண்டித்தும், அதை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.