கன்னியாகுமரியில் விபரீதம்: குடும்ப சண்டையில் மாமியார் மீது வெந்நீர் ஊற்றிய மருமகள்..!
Seithipunal Tamil June 05, 2025 11:48 AM

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேபாகோடு மாதிக்காவிளையை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி மரியஜோய்(67). இவர்களுக்கு 02 மகன்கள் உள்ள நிலையில், 02-வது மகன் சந்தோஷ்குமார் மனைவி சைனிமோள்(35). 

இரண்டாவது மருமகளான சைனிமோளுக்கும், மாமியார் மரியஜோய்க்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்ட்டுள்ளது. ம்பவத்தன்று மாமியார், மருமகள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, அது வாக்குவாதமாக முற்றியுள்ளது.  

அப்போது ஆத்திரமடைந்த மருமகள் சைனிமோள், மாமியாரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். பின்னர் அடுப்பில் இருந்த வெந்நீரை எடுத்து மாமியார் மீது ஊற்றியுள்ளார்.அத்துடன், ஆத்திரம் அடங்காமல் மாமியாரை கையால் முதுகில் தாக்கியும் உள்ளார்.

இதில் காயமடைந்த மாமியார் மரியஜோயை குடும்பத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து மரிய ஜோய் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சைனிமோள் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.