இன்று முதல் தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் குறைவாக இருப்பதாக தோன்றினால் இந்த வாய்ப்பைத் தவற விடாதீங்க.
தமிழகம் முழுவதும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடந்த வருடத்தை விட இந்த வருடம் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர். பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது மறு கூட்டல் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அதன்படி இன்று ஜூன்5ம் தேதி முதல் மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை ஜூன் 5ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை மாவட்ட தேர்வுகள் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.