பொதுவாக அஜீரணம் ,கிட்னி கல் ,வாயு கோளாறு ,அல்சர் போன்ற காரணத்தால் திடீரென்று வயிறு வலி வந்து நம்மை பாடாய் படுத்தும் .இந்த வயிறு வலிக்கு வீட்டு வைத்தியம் மூலம் எப்படி நிவாரணம் கிடைக்கும் என்று இப்பதிவில் நாம் பார்க்கலாம்
1. நம் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு பல குறிப்புகளை பின்பற்றினால், இந்த வயிறு வலி பிரச்சனையில் இருந்து உடனே நிவாரணம் கிடைக்கும்
2.முதலில் சிறிது இஞ்சித் துண்டுகளை தண்ணீரில் போட்டு விடவும் .பின்னர் இந்த இஞ்சி துண்டுகளை சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
3.அதன் பின்னர் அடுப்பிலிருந்து இந்த இஞ்சியை இறக்கி ,இப்போது இந்த தண்ணீரை வடிகட்டி சிறிது தேன் சேர்க்கவும்.
4.இந்த கலவையை ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை குடித்து வந்தால் உடனடி நிவாரணம் உண்டு
5.அதேபோல சோம்பும் .இஞ்சியை போன்றே வயிற்று வலியைக் குறைக்க உதவுகிறது. இதற்கு ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து விடவும். பிறகு அதை இறக்கி விடவும்
6.பிறகு இந்தக் கலவையை வடிகட்டி விடுங்கள் .அதன் பின்னர் அதனுடன் தேன் கலந்து குடிக்கவும். இப்படி இந்த கலவையை நீங்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை குடிக்கலாம்.