பொதுவாக பல பெண்கள் முகம் பொலிவுக்கு ,புருவம் பொலிவிற்கு ,ஸ்கின் பொலிவிற்கு என்று தனித்தனியாக நிறைய செலவு செய்து தங்களின் அழகை மேம்படுத்துகின்றனர் .ஆனால் இயற்கையாக கிடைக்கும் சில பொருட்களை கொண்டு நம் முகம் பிரகாசிக்க செய்யலாம் ,அது பற்றி பின்வருமாறு பார்க்கலாம்
1.முதலில் ஒரு தேக்கரண்டி பச்சை தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ,இரண்டையும் கலந்து எடுத்து கொள்ளவும் .
2.பின்னர் அந்த லெமன் ,தேன் கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
3.பின்னர் 15-20 நிமிடங்கள் ஊறிய பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.இப்போது முகம் பொலிவாக இருக்கும்.அடுத்து இன்னுமொரு முறை பற்றி பார்ப்போம்
4. இரண்டு தேக்கரண்டி பச்சை தேன், ஒரு தேக்கரண்டி கற்றாழை மற்றும் கால் தேக்கரண்டி இலவங்கப்பட்டை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலக்கவும்.
5.இந்த கற்றாழை கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
6.5-10 நிமிடங்கள் ஊறவைத்து ஓய்வெடுக்க அனுமதிக்கவும்.
7.10 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
8.இது இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்பட்டு இப்போது உங்கள் முகம் பொலிவுடன் இருக்கும்