ஆந்திராவில் ஆட்டோ விபத்து...! கார் மோதியதில் 4 பேர் பலி 5 பேர் படுகாயம்...!
Seithipunal Tamil June 06, 2025 05:48 AM

ஆந்திராவில் நெல்லூர் மாவட்டம் ஆத்மகூர் அடுத்த வெங்கட்ராவ் பள்ளியை சேர்ந்த 8 பெண் தொழிலாளர்கள், தெல்ல பாடுவிலுள்ள புகையிலை தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். எப்போதும்போல் இன்று அதிகாலை ஆட்டோவில் வேலைக்கு சென்றனர்.

இதில் ஆத்மகூர் அடுத்த ஏ.எஸ்.பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார், ஆட்டோ மீது கடுமையாக மோதி விட்டு சென்றது.

இவ்விபத்தில் ஆட்டோவில் இருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டனர். இச்சம்பவத்தில் 4 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவலர்கல் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.