இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இது குறித்து ஸ்ரீநகர், நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் இந்திய சமூகத்தை ஒன்றிணைத்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு தேசத்தை ஆதரித்தன. இச்செயல் இந்தியாவில் அரசியல் கட்சிகளின் முதிர்ச்சியையும் பரஸ்பர புரிதலையும் காட்டியது.
பாகிஸ்தான் நம்மை நேரடியாக வெல்ல முடியாததால், அது பயங்கரவாதத்தின் உதவியைப் பெற்று, பினாமிப் போர்களைத் தொடங்கியது. நாம் அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே பிரிந்தோம், ஆனால் பிரிந்த உடனேயே அவர்கள் முரண்பாட்டை உருவாக்கத் தொடங்கினர்" எனக் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
கோபம் அடைந்த பாகிஸ்தான், எல்லையோர மாநிலங்களில் குடியிருப்புகளை குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதல் முயற்சியை இந்தியா முறியடித்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய அரசு எடுக்கும் முழு நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தருவோம் என எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கூறிவிட்டன. இதனை சுட்டிக்காட்டும் வகையில் மோகன் பகவத் பேசியிருந்தார்.