18 வருஷ கனவு சார்…! “வெற்றி பெற்ற ஆர்.சி.பி அணி…” சந்தோசத்தில் தீவிர ரசிகர் செய்த காரியம்.. என்னன்னு தெரியுமா?…!!
SeithiSolai Tamil June 07, 2025 09:48 AM

டி20 ஐபிஎல் கிரிக்கெட் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்தது. அவற்றின் இறுதி ஆட்டம் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. அதில் ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி தூக்கியதால் ஆர்.சி.பி. ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் தயாள்.

இவர் சொந்த ஊரிலேயே சலூன் கடை ஒன்று நடத்தி வருகிறார். ஆர்.சி.பி யின் தீவிர ரசிகரான இவர் 18 வருடங்களுக்குப் பிறகு ஆர்.சி.பி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக 04/06/2025 அன்று ஒரு நாள் முழுவதும் தனது கடைக்கு முடி வெட்டும் வரும் நபர்களுக்கு இலவசமாக முடி வெட்டப்படும் என அறிவித்திருந்தார்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பலரும் தயாளின் சலூனுக்கு சென்று இலவசமாக முடிவெட்டிக் கொண்டனர். இதுகுறித்து தயாளிடம் கேட்டபோது, நான் விராட் கோலியின் தீவிர ரசிகர். ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக 18 வருடங்களுக்குப் பிறகு ஆர்.சி.பி வெற்றி பெற்றது.

என்னுடைய பல வருட கனவு நிறைவேறியதால் அந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக என்னுடைய கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்வதாக கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.