சென்னை ராயப்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவியை காதலிக்க சொல்லி கத்தியைக் காட்டி மிரட்டி, கன்னத்தில் அறைந்த அதிமுக நிர்வாகி சூர்யா, முடியைப் பிடித்து தாக்கியுள்ளார்.
பள்ளி மாணவியை நடுரோட்டில் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கியதைப் பார்த்த அங்கிருந்தவர்கள், தாக்குதல் நடத்திய அதிமுக இளைஞர் பாசறை 118வது வட்டச் செயலாளர் சூர்யாவை பிடிக்க முயற்சிக்கும் போது அவர் அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காரில் மது விற்ற வழக்கில் கைதான சூர்யா (18) ஜாமினில் வெளியே வந்துள்ளார். தனது மாமா அதிமுக வட்ட துணைச் செயலாளர் கானா ஆறுமுகத்தின் பெயரைச் சொல்லி அப்பகுதியில் மாமூல் வசூல், இலவச பிரியாணி கேட்டு மிரட்டி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைய வந்த போது ராயப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.