பொதுவாக கண் பார்வை நன்றாக இருக்க வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் .அதனால் நாம் இப்பதிவில் கண்ணை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று நாம் காணலாம் .
1. முருங்கை பூவுடன் பசும்பாலை காய்ச்சி அடிக்கடி குடித்து வர கண் பார்வை பலம் பெரும் .
2.மேலும் கண் பார்வை சிறப்பாக இருக்க ஜாதிக்காய் பயன்படுகிறது .மேலும் கருவளையத்துக்கும் இது சிறந்த மருந்து ,.
3.கண் பார்வை முதிய வயதிலும் நல்லாருக்க நந்தியா வட்டப் பூவின் சாறினை சில சொட்டுகள் கண்ணில் விட்டால் கண்களுக்கு நல்லது.
4.கரிப்பான் இலை, மிளகு மூன்றையும் சேர்த்து நன்கு அரைத்து கொதிக்க வைத்து,தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளித்து வந்தால் கண் நோய்கள் காணாமல் ஓடி விடும் .
5.கண் கோளாறுகள் என்பது வயதிலும் வராமலிருக்க பொண்ணாங்கன்னி கீரையை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக்கும்.
6.கண் கோளாறு தள்ளாத வயதிலும் வராமலிருக்க கண்களை அடிக்கடி சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும்.
7. அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு ஆகிய நான்கையும் வறுத்து பொடி செய்து , தேனில் கலந்து சாப்பிட்டால் கண் எரிச்சல் நீங்கும்.