பருவமழையை எதிர்கொள்ள தயார்... முழுவீச்சில் தூர்வாரும் பணிகள்... அமைச்சர் கே.என்.நேரு!
Dinamaalai June 07, 2025 12:48 AM

 


தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளது. இதனையடுத்து அதனை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து  அமைச்சர் கே.என். நேரு செய்தியளர்களுக்கு பேட்டி அளித்தார் .

அவர் அதில்  தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. 

மேட்டூர் அணை ஜூன்   12ம் தேதி திறக்கப்பட உள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல ஏதுவாக ரூ. 80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.  தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு  நான் எதுவும் கருத்து கூற இயலாது. தலைமை தான் முடிவெடுக்கும் என கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.