டெல்லி செல்ல வேண்டிய பயணி ஒருவர், விமான நிலையத்தில் சில நிமிடங்கள் தாமதம் ஆனதால் விமானத்தை தவற விட்டதாகவும், இதனால் தனக்கு 2.65 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
சயன் கார்க் என்ற அந்த பயணி, ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது காலை 4:40 மணிக்கு, 5:10 மணிக்குள் பாதுகாப்பு சோதனையையும் முடித்துவிட்டார்.
பின்னர், ஒரு இண்டிகோ அதிகாரி வந்து, “பத்து முதல் 15 நிமிடங்களில் பேருந்து வரும்,” என்று கூறிய நிலையில், பேருந்தில் ஏறுவதற்கு பயணிகள் நெரிசலாக இருந்தனர். இதனை அடுத்து அவர், “கழிப்பறை சென்று வந்துவிடலாம்,” என்று நினைத்து சென்றதாகவும், ஆனால் திரும்பி வந்த போது பேருந்து சேவை முடிந்துவிட்டது என்று கூறியதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.
விமான நிலைய அதிகாரிகளிடம் எவ்வளவோ பேசியும், “விமானம் புறப்பட தயாராகிவிட்டது; நீங்கள் அடுத்த விமானத்தை செல்லலாம்,” என்றும் கூறியுள்ளனர். ஆனால், தான் அவசர வேலையாகச் செல்வதாகவும், இந்த விமானத்தில் நான் செல்லவில்லை என்றால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படும் என்றும் கூறியதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவே இல்லை என்றும், விமான நிறுவனம் எந்த உதவியும் செய்யவில்லை என்றும், டிக்கெட் பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை என்றும், “கருணையே இல்லாத வகையில் மனிதர்கள் நடந்து கொண்டார்கள்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“என்னுடைய ஒரு மாத உழைப்பு, ரூ.2.65 லட்சம் நஷ்டமானது. பணம் கூட பெரிய விஷயம் இல்லை, ஆனால் கொஞ்சம்கூட மனித நேயம் இல்லாமல் விமான நிலைய அதிகாரிகள் நடந்து கொண்டார்கள்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து விமான நிறுவனம் விளக்கம் அளித்த போது, “விமானத்தை தவறவிட்டதால் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் விமானம் புறப்படுவதற்கு 25 நிமிடங்களுக்கு முன்னதாக வாசல்கள் மூடப்படும். நீங்கள் வாசல் மூடப்பட்ட பிறகு வந்ததால், உங்களது பயணம் உறுதி செய்யப்படவில்லை. எங்கள் விமான நிலையக் குழு உங்கள் வசதிக்காக அடுத்த விமானத்தை பரிந்துரை செய்தது, ஆனால் நீங்கள் அதை ஏற்கவில்லை. என்றாலும், உங்கள் பொறுமைக்கும் புரிதலுக்கும் நன்றி,” என்று தெரிவித்துள்ளது.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.