தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தி.மு.க.,வின் மூத்த தலைவரான இவர், கடந்த மாதம் 08-ஆம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் கடந்த 10-ஆம் தேதி வீடு திரும்பினார்.
இந்நிலையில், மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றதாக கூறப்படுகிறது.
அமைச்சர் துரைமுருகன் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாகவும், இன்னும் 02 அல்லது 03 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன்பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.