Breaking: இனி நகைக்கடன் பெறுவதற்கு ரசீது தேவையில்லை… புதிய விதிமுறைகளை வெளியிட்டது இந்திய ரிசர்வ் வங்கி…!!!
SeithiSolai Tamil June 08, 2025 02:48 AM

இந்திய ரிசர்வ் வங்கி நகை கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை அறிவித்தது. இந்த புதிய விதிமுறைகள் ஏழை எளிய மக்களை பாதிக்கும் என்பதால் மத்திய அரசாங்கம் நகை கடன் விதிமுறைகளில் தளர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. இதன் காரணமாக தற்போது நகை கடன் பெறுவதில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி 2.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளுக்கு அவற்றின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கப்படும். அதன்பிறகு 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான நகைகளுக்கு 80 சதவீதம் வரையிலும், 5 லட்சத்திற்கு மேல் 75% நகைகளின் மதிப்பில் கடன் வழங்கப்படும்.

2.5 லட்சம் வரையில் கடன் பெறுபவர்களுக்கு கடனை திருப்பி செலுத்தும் திறன் பற்றிய மதிப்பீடு தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்க நகை கடன் பெற ரசீது தேவை இல்லை எனவும் இந்த நகை என்னுடையது தான் என சுய அறிவிப்பு செய்தாலே போதும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.