சட்டி சுட்டதடா.. கைவிட்டதடா… ஆயுதங்கள் வேண்டும் என அமெரிக்காவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. கண்டுகொள்ளாத டிரம்ப்..
Tamil Minutes June 08, 2025 06:48 AM

 

பாகிஸ்தான், ஒரு பக்கம் இந்தியாவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு, இன்னொரு பக்கம் இந்தியாவின் தாக்குதலை முறியடிக்கவும், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கவும், “ஆயுதங்கள் கொடுங்கள்” என்று அமெரிக்காவிடம் பிச்சை கேட்டு கெஞ்சி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்கம் அளிக்கவும், பாகிஸ்தானின் தீவிரவாத முகமூடியை கிழிக்கவும், இந்தியா ஏழு எம்பிக்கள் தலைமையிலான ஏழு குழுவை உலக நாடுகளுக்கு அனுப்பியது. அதன் பின்னர், போட்டிக்கு பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையில் ஒரு குழுவை அமைத்து, முக்கிய நாடுகளுக்கு அமைதி தூதராக அனுப்பியது.

இந்த குழு தற்போது அமெரிக்காவில் இருக்கும் நிலையில், அங்குள்ள அமெரிக்க அதிகாரிகள் முன்னிலையில், தங்களுக்கு ஆயுதம் வேண்டும் என்று பாகிஸ்தான் கெஞ்சிக் கொண்டிருக்கிறது.

“இந்தியா எங்களை தாக்கிய போது, 80 விமானங்கள் மற்றும் 400 ஏவுகணைகள் கொண்டு தாக்கியது. அவற்றில் சில அணுகுண்டு இணையான சக்தி கொண்டவை. பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டுவந்த தொழில்நுட்பத்தை தான் இந்தியா பயன்படுத்துகிறது. அதேபோல் எங்களுக்கும் அந்த தொழில்நுட்பத்தை கொடுங்கள். நாங்கள் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறோம்,” என்று முஸாதிக் மலிக் கூறினார்.

மேலும், “எங்களுக்கு வான்வெளி பாதுகாப்பு இல்லையென்றால், எங்களுடைய பள்ளி குழந்தைகளையும், பொதுமக்களையும் காப்பாற்ற முடியாது. எங்களுடைய நாடே பிணக்காடாக ஆகிவிடும். அதற்காக நீங்கள் எங்களுக்கு ஆயுத உதவி செய்ய வேண்டும்,” என்றும் கூறினார்.

ஆனால், டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் குழுவின் இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, பிலாவல் பூட்டோ தலைமையிலான, 13 பேர் கொண்ட குழு எந்தவித வெற்றியும் இல்லாமல் திரும்பி வரவிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்தியா–பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளை ஒப்பிட்டால், அமெரிக்காவுக்கு இந்தியாவே முக்கியம். வர்த்தகம் உள்பட பல விடயங்களில் இந்தியாவுடன் இருப்பதே அமெரிக்காவுக்கு லாபமாக இருப்பதாக கூறப்படுகிறது.

எனவேதான், பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக உதவ அமெரிக்கா முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.