தனது டிரைவருக்கு ரூ.150 கோடி மதிப்பில் 3 ஏக்கர் நிலத்தை பரிசாக வழங்கிய சிவசேனா எம்பி…. என்ன காரணம்?… சர்ச்சையை கிளப்பிய சம்பவம்…!!!
SeithiSolai Tamil June 27, 2025 08:48 PM

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சலார் ஜங்க் என்ற வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மிகவும் செல்வாக்கு நிறைந்த குடும்பமாகும். இந்த குடும்பத்தினர் கடந்த காலத்தில் ஹைதராபாத் நிஜாம்களிடம் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு பல கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் வசிக்கும் சிவசேனா எம்பி சந்தீபன்ராவிடம் டிரைவராக ஜாவேத் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு மகாராஷ்டிராவில் சுமார் 150 கோடி மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை சலார் ஜங்க் குடும்பத்தினர் பரிசாக வழங்கியுள்ளனர். இதற்கான ஆவணத்தையும் கொடுத்துள்ளனர்.

இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. டிரைவராக வேலை பார்க்கும் ஒருவருக்கு ஏன் இவ்வளவு மதிப்புள்ள பரிசு கொடுக்க வேண்டும் என்ற சந்தேகம் இருந்தது. இதனால் அந்த மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சிவசேனா எம்பி மற்றும் அவரது மகன் மற்றும் டிரைவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் சலார் ஜங்க் குடும்பத்தினருடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது.

அதனால் அவர்கள் அந்த நிலத்தை எனக்கு பரிசாக கொடுத்தனர் என்று டிரைவர் கூறினார். ஜாவேத் எங்கள் டிரைவர் என்றாலும் அவர் செய்யும் எல்லாவற்றின் மீது எங்களுக்கு கட்டுப்பாடு இல்லை. எப்படி இருந்தாலும் ஹிபனாமா என்பது சொத்துக்களை பரிசாக வழங்குவதற்கான சட்டபூர்வமாக செல்லுபடி ஆகும் என்று எம்பியின் மகன் கூறினார். வக்கீல் ஒருவர் அளித்த புகாரின் பேரில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.