காலிங் பெல் அடித்ததும் ஓடி வந்த பணிப்பெண்…. “விடாமல் அறைந்து தாக்கிய பெண்…” பாவம் அவங்க….! கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!
SeithiSolai Tamil June 27, 2025 11:48 PM

ஃபரிதாபாத் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று 10 நாட்கள் கழித்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செக்டார்-17 பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணியாற்றும் தலித் பெண் ஷ்யாமா தேவி மீது, அந்த வீட்டின் உரிமையாளரின் மனைவி தீபாலி ஜெயின் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் சமூக அமைப்புகள் மற்றும் தலித் உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். போலீசார் தீபாலி ஜெயின்மீது எஸ்சி/எஸ்டி சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷ்யாமா தேவி, ஃபரிதாபாத் செக்டார் 17-இல் தருண் ஜெயின் என்பவரது வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் வேலை செய்து வருகிறார். ஜூன் 16 ஆம் தேதி, சந்தைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய ஷ்யாமா தேவியை, அங்கிருந்த தீபாலி ஜெயின் எந்த காரணமும் இல்லாமல் பால்கனியில் இருந்து திட்ட ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் சாதிய ரீதியான அவதூறான வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டதாக ஷ்யாமா தேவி புகாரில் தெரிவித்துள்ளார். அடுத்த நாள் ஜூன் 17 ஆம் தேதி காலை 10.30 மணியளவில், வீட்டு ஓட்டுநர் தவறுதலாக தரைத்தள மணியை அடித்ததால், கேட்டைத் திறக்க சில நிமிடங்கள் தாமதமானதாகக் கூறி தீபாலி ஜெயின் கீழே வந்து ஷ்யாமா தேவியை 6–7 முறை அறைந்ததாகவும், வைப்பரால் தாக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. சத்தம் கேட்ட சவுரப் ஜெயின் கீழே வந்து தனது மனைவியை மேல் மாடிக்கு அழைத்துச் சென்றதும் காணப்படுகின்றது. இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீபாலி ஜெயின் மீது எஸ்சி/எஸ்டி சட்டம், தாக்குதல், துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால் புகார் அளிக்கப்பட்டு பத்து நாட்கள் கடந்தும் எந்தவொரு பிடிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால், பாதிக்கப்பட்ட ஷ்யாமா தேவி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“இது போன்ற குற்றச்சாட்டுகள் சாதாரண நபர் மீது இருந்திருந்தால், அவரை உடனடியாக கைது செய்திருப்பார்கள். ஆனால் அதிகார செல்வாக்கு காரணமாக இங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என அவர்கள் கோபமுடன் கூறியுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை பழைய ஃபரிதாபாத் துணை ஆணையர் வினோத் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி ஆதாரங்களுடன் வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.