அடச்சீ..! நீங்களும் ஒரு ஆசிரியரா…? “பள்ளி மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள்”… இணையத்தில் வைரலாக்கி… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்..!!!
SeithiSolai Tamil June 28, 2025 04:48 AM

ஜப்பானில் நகோயா நகர் பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் பணிபுரியும் 2 ஆசிரியர்கள் செய்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு என்று ஒரு சமூக வலைதள குழு உள்ளது. இந்த குழுவில் 2 ஆசிரியர்கள் பள்ளியில் படித்து வரும் சிறுமிகளை தவறாக புகைப்படம் எடுத்து அதனை அந்த குழுவில் அனுப்பியுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் மற்ற இணையதளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பள்ளி ஆசிரியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது உறுதியான நிலையில் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ஆசிரியர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல் துறையினர் தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய ஆசிரியரே இது போன்ற செயல்களை செய்வது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.