சென்னையில் இருந்து சென்ற மின்சார ரெயில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சித்தேரியில் இருந்து காட்பாடிக்குச் சென்ற 09 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. என்ஜினில் இருந்து 03-வது ரெயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இறங்கியதால் விபத்து நேர்ந்துள்ளது. இந்த மின்சார ரெயில் தடம் புரண்டதால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக காட்பாடி செல்லும் அனைத்து ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன.
விபத்தின் போது ஏற்பட்ட செத்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.