தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, “தமிழகத்தில் சிறப்பாக நடைபெறும் தி.மு.க. ஆட்சியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொறுத்துக்கொள்ள முடியாமல், இடைமறித்து கேவலமான அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்,” என்றார்.
தொகுதி மறுவரையறை குறித்து எடப்பாடி கூறிய கருத்து முற்றிலும் கேலிக்கூத்தானது என விமர்சித்தார்.
மேலும், “பா.ஜ.க.வின் ஊதுகுழலாகவே எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். பா.ஜ.க. சொல்ல வேண்டிய பதில்களை அவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
கூட்டணி இல்லாதபோது ஒன்று பேசினார், கூட்டணி சேர்ந்தபின் முழுக்க மாறிவிட்டார்,” எனக் குற்றம்சாட்டினார்.
அமித்ஷா வருகையைப் பற்றிய கேள்விக்கு, “மோடி 8 முறை தமிழ்நாட்டுக்கு வந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஷா என்ன செய்ய முடியும்?” என்றும் சாடினார்.