ரூ.4.8 கோடியை வட்டியுடன் திருப்பி கொடுங்க.. தொல்லியல் துறைக்கு தஞ்சை மாநகராட்சி கடிதம்..!
Top Tamil News June 08, 2025 10:48 PM

தஞ்சை பெரிய கோவிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், அதற்காக ஒதுக்கப்பட்ட  ரூபாய் 4.8 கோடியை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என தஞ்சை மாநகராட்சி தொல்லியல் துறையிடம் கோரியுள்ளது. 

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் என வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சரித்திர புகழ்வாய்ந்த இந்தக்கோயில் இந்திய தொழில் துறையில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி கிரிவலப் பாதை,  படித்துறைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு ‘தஞ்சை ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ4.80 கோடி நிதியை தஞ்சை மாநகராட்சி தொல்லியல் துறையிடம் வங்கியுள்ளது. 

ஆனால் நிதி வழங்கியும் குறிப்பிட்ட காலத்திற்குள் அதற்கான பணிகளை தொல்லியல் துறை மேற்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அப்போதே அந்தத் திட்டத்தை தஞ்சை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. திட்டம் ரத்து செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை தொல்லியல் துறை திருப்பி  ஒப்படைக்கவில்லை. இதனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒதுக்கிய 4 கோடியே 80 லட்சம் ரூபாயை வண்டியுடன் வழங்குமாறு தொல்லியல் துறைக்கு தஞ்சை மாநகராட்சி கடிதம் அனுப்பியுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு நிதி கிடைக்காமல் கிடப்பில் உள்ள நிலையில்,  தொல்லியல் துறைக்கு நிதி ஒதுக்கியும் பணிகள் மேற்கொள்ளாதது தஞ்சை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.