“அதிகாரத்தை பயன்படுத்தி ரூ.1.76 கோடி மோசடி….” உடந்தையாக தாயும்…. வங்கி ஊழியரால் பெரும் நஷ்டம்…. பகீர் சம்பவம்….!!
SeithiSolai Tamil June 09, 2025 04:48 AM

சென்னை மாவட்டம் அமைந்தகரையில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் வெங்கடேசன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களது வங்கி கிளையில் விற்பனை மேலாளராக மகேந்திர குமார்(34) என்பவர் வேலை பார்த்தார்.

அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ஒரு கோடியை 76 லட்சத்து 1,972 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதன் பிறகு அந்த பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். அவர் மீதும், அவருக்கு இருந்த அவரது தாய் விஜயலட்சுமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியுள்ளார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் மகேந்திர குமார் தனது தாய் விஜயலட்சுமியுடன் இணைந்து பணமோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதனால் நேற்று இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.