“இனி யாரும் தப்பிக்க முடியாது…” 6 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்… கமிஷனரின் அதிரடி உத்தரவு !!
SeithiSolai Tamil June 08, 2025 10:48 PM

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் மேலப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்(39), சீனி மாரியப்பன்(33), லட்சுமணன்(37) ஆறுமுக நயினார்(39), அப்துல்காதர்(31), செல்வம்(41) ஆகிய 6 பேரும் சேர்ந்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

எனவே இவர்கள் 6 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் துணை கமிஷனர், போலீஸ் உதவி கமிஷனர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் சேர்ந்து திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரிடம் பரிந்துரை செய்துள்ளனர். இளைஞர்கள் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதால் பொது ஒழுங்கு மற்றும் பொதுச் சுகாதார பராமரிப்பிற்கு கேடு விளைவிக்கும்.

எனவே இந்த 6 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பெயரில் நேற்று முன்தினம் போலீசார் 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.