டிஜிட்டல் பண மோசடி தடுக்கும் ஏர்டெல்.... ஆர்பிஐ, பேமெண்ட் கார்ப்பரேஷனிடம் ஆதரவு கோரிக்கை
ET Tamil June 09, 2025 01:48 AM
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஆகிய சுமார் 40 வங்கிகளை அணுகி, டிஜிட்டல் பண மோசடிகளை தடுப்பதற்கான முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுள்ளது.



பண மோசடிகளை தடுப்பதற்கு ஏர்டெல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சில மாதங்களுக்கு முன்பு airtel spam detection வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. இதன் மூலமாக மோசடி போன்கால்களை குறித்த தகவலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இதன் மூலமாக பல வகையான மோசடிகள் தடுக்கப்படும் என ஏர்டெல் தெரிவித்திருந்தது.



ஒழுங்குமுறை விவாதங்களுக்கு ஏர்டெல் ஆதரவைத் தெரிவித்தது. நிதித் தொடர்புகளில் நுகர்வோர் பாதுகாப்பிற்கு ஓவர்-தி-டாப் (OTT) தளங்கள் பொறுப்பேற்கப்படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை உருவாக்குவதில் ரிசர்வ் வங்கிக்கு உதவி வழங்குவதாக PTI அறிக்கை தெரிவிக்கிறது.



டிஜிட்டல் மோசடியில் வளர்ந்து வரும் தந்திரங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கவும், பாதுகாப்பான டிஜிட்டல் நடைமுறைகளை ஊக்குவிக்கவும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மே 15 அன்று, பயனர்களை குறிவைக்கும் டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், மோசடி வலைத்தளங்களை நிகழ்நேரத்தில் தடுக்க வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பாதுகாப்பு தளத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தியது.



ஏர்டெலின் இந்த சேவை உலகளவில் இதுவே முதல் முறையாகும். இந்த சேவை முதன்முதலில் ஹரியானாவில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் காலப்போக்கில் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். வாட்ஸ்அப், டெலிகிராம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மின்னஞ்சல்கள், வலைத்தளங்கள், எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல தொடர்பு தளங்களில் மோசடிகளை தடுக்க உதவும் என தெரிவித்துள்ளது.



© Copyright @2025 LIDEA. All Rights Reserved.