இன்று மதியம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானம் லண்டன் நோக்கி கிளம்பியது.
கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமானத்திலிருந்து அவசர காலத்திற்கு அழைக்கப்படும் 'May day call' கட்டுப்பாட்டு நிலையத்திற்கு வந்துள்ளது. ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே விமானம் சுமார் 600 அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.
விமானத்தில் 230 பயணிகள் பயணித்துள்ளனர். 2 விமானிகள், 10 பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்துள்ளனர்.
விமானத்தில் பயணித்தவர்களின் மொத்த விவரமும் வெளியாகியுள்ளது. இரண்டு கைக்குழந்தை உட்பட 7 குழந்தைகளும் பயணித்துள்ளனர். முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் பயணம் விமானத்தில் பயணித்துள்ளார்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. இதுவரை சுமார் 50 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விமான விபத்து மற்றும் மீட்பு பணிகள், உதவிகள் தொடர்பாக அழைப்பதற்காக ஏர் இந்தியா விமானம் அவசரகால அழைப்பு எண்ணை அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா பிரத்யேக பயணிகள் உதவி எண் 1800 5691 444
விமான விபத்து தொடர்பாக அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
011-24610843
9650391859
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம்.
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலைய அறிவிப்பு!
AI 171 விமானம் அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக்கிற்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமான நிலையத்திற்கு வெளியே விபத்திற்கு உள்ளானது.
இதன் காரணமாக, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து விமானங்களும் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
விமானம் விழுந்து நொறுங்கியதில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து இதுவரை 50 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, 80% மீட்புப் பணிகள் முடிந்துள்ளதாக குஜராத் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது