“தந்தை வயதுடைய நபருடன் திருமணம்”… உடலுறவுக்கு அழைத்த கணவன்… நள்ளிரவில் கோடாரியால் வெட்டி கொன்ற மனைவி… திருமணமாகி 15 நாட்களில் நடந்த கொடூரம்…!!!!
SeithiSolai Tamil June 13, 2025 07:48 PM

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா ரகுவன்சி என்ற தொழிலதிபரை அவரது மனைவி சோனம் ஹனிமூன் அழைத்து சென்று கள்ளக்காதலன் மற்றும் கூலி ஆட்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் தாக்கமே அடங்காத நிலையில் மீண்டும் ஒரு பெண் தன் கணவனை கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கங்குலி மாவட்டத்தில் அனில் லோகண்டே என்ற 55 வயது நபர் வசித்து வந்துள்ளார்.

இவரது மனைவி கேன்சரால் இறந்து விட்டதால் இரண்டாவது ஆக ராதிகா என்ற 27 வயது பெண்ணை கடந்த 15 நாட்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் தாம்பத்திய உறவு தொடங்குவதில் ராதிகாவுக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவ நாளில் அணில் ராதிகாவை தாம்பத்தியத்திற்கு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு ராதிகா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது. அவர் உறவுக்கு அழைத்த நிலையில் ராதிகா எரிச்சல் அடையவே இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகராறு முற்றியது.

பின்னர் அணில் தூங்குவதற்காக சென்றுவிட்ட நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணியளவில் தன் கணவனை கோடாரியால் ராதிகா வெட்டி கொன்றார். இதுகுறித்து ராதிகா தன் உறவினர்களிடம் கூறிய நிலையில் அவர்கள் கொடுத்த தகவலின்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அணில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ராதிகாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விருப்பத்திற்கு மாறாக வயது அதிகமுள்ள நபருடன் திருமணம் செய்து வைத்ததால் கொலை செய்தாரா.? இல்லையெனில் தாம்பத்திய உறவுக்கு விருப்பம் இல்லாமல் தன் கணவரை தீர்த்து கட்டினாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.