“பஸ்ஸில் செல்போன் பார்த்த தாய்-மகள்”… பைக்கில் வந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த நபர்… கண்ணிமைக்கும் நொடியில்… மக்களே கவனம்… அதிர்ச்சி வீடியோ…!!!
SeithiSolai Tamil June 14, 2025 01:48 PM

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ திருடர்களின் துணிச்சலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதாவது பேருந்தில் ஒரு தாயும் மகளும் செல்கிறார்கள். அதில் தாய் தன்னுடைய கையில் செல்போனை வைத்தபடியே தன் மகளுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் சாலையில் வந்து கொண்டிருந்த ஒருவர் ஜன்னல் வழியாக அருகே வந்து திடீரென அவர்களின் கையில் இருந்த செல்போனை பிடுங்கினார்.

அந்தப் பெண்ணால் அந்த நொடி எதுவும் செய்ய முடியவில்லை. அவர் நைசாக வந்து செல்போனை பறித்துவிட்டு பைக்கில் வேகமாக சென்றார். மேலும் அத்துடன் வீடியோ முடிவடையும் நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி நெட்டிசனகள் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.