ஏர் இந்தியா விமான விபத்து: எல்லா வழிகளிலும் உதவ தயாராக உள்ளோம் - முகேஷ் அம்பானி..!
Top Tamil News June 14, 2025 01:48 PM

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அம்பானி ஒரு அறிக்கையில், தானும் தனது மனைவி நிதா அம்பானியும், "அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தால் ஏற்பட்ட பெரும் உயிரிழப்பால் ஆழ்ந்த வேதனையிலும் துக்கத்திலும்" இருப்பதாக தெரிவித்தார்.

"இந்தத் துயரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களின் உண்மையான மற்றும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அவர் கூறினார். "இந்த துயரமான நேரத்தில், ரிலையன்ஸ் தனது முழு மற்றும் உறுதியான ஆதரவை நடந்து கொண்டிருக்கும் நிவாரண பணிகளுக்கு வழங்குகிறது. சாத்தியமான எல்லா வழிகளிலும் உதவ தயாராக உள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக டாடா நிறுவனம், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி செய்யும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.