அகமதாபாத் விமான விபத்து….! உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம்…. வெளியான முக்கிய தகவல்….!!
SeithiSolai Tamil June 15, 2025 02:48 AM

அகமதாபாத் விமான விபத்து, இந்தியா முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானம் திசை தவறி பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியது.

இதில், விமானத்தில் இருந்தவர்கள் மட்டும் அல்லாமல், விடுதி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியினரும் பலியாகினர். மொத்தம் 274 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. டாடா குழுமம் சார்பில் ஏற்கனவே ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினரின் உடனடி தேவைகளுக்காக கூடுதலாக இத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.