இன்றைய காலகட்டத்தில் நேர்காணல் என்பது ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தற்போது நன்றாக படிப்பவர்களுக்கு கூட வேலை கிடைப்பதில்லை. இருப்பினும் பல்வேறு விதமான நேர்காணல் தொடர்பான செய்திகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு செய்தி தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளது.
அதாவது நேர்காணலில் ஒருவர் மிகவும் நிதானமாக செயல்பட்டுள்ளார். இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் தனக்கு வேலை வாய்ப்பு நிராகரிக்கப்பட்டதாக ரெட்டிட் பயனர் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார். அனைத்து சுற்றுகளிலும் நான் தேர்ச்சி பெற்றேன். இருந்த போதிலும் பதட்டமின்றி இருப்பதால் இந்த நிறுவனத்திற்கு நான் பொருத்தமாக இருக்க மாட்டேன் என்று கடைசி நேரத்தில் HR கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.