தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தெலுவரிக்குடம் கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் மோக்சித் என்ற மகன் இருந்துள்ளார். இந்த தம்பதியினர் சூரியபேட் மாவட்டம் நிமிகலு டங்கு கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகளுடன் சென்றுள்ளனர்.
அங்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள கோவிலில் உறவினர்கள் நின்று கொண்டிருந்த போது மோக்சித் திடீரென சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வந்த ட்ராக்டர் சிறுவன் மீது பயங்கரமாக மோதியது.
View this post on Instagram
இதனால் மோக்சித் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.