உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதர்நாத்துக்கு ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் மொத்தம் 6 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் கவுரிகுந்த் வனப்பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஹெலிகாப்டரில் பயணித்த பயணிகளுக்கு என்ன ஆனது என்று தற்போது வரை தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.