Rajini: 'ரொம்ப வருத்தமாக இருக்கு; இனிமேல் இப்படி...'- விமான விபத்து குறித்து ரஜினி
Vikatan June 17, 2025 06:48 PM

`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த்  நடிப்பில் `கூலி' திரைப்படம் வெளியாக இருக்கிறது.

`லியோ' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலி

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். `கூலி' படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜூன்17) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ‘கூலி’, ‘ஜெயிலர்’ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ ஆகஸ்ட் 15 ஆம் தேதி ‘கூலி’ படம் வெளியாகிறது. ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன”  என்று தெரிவித்திருக்கிறார்.

அகமதாபாத் விமான விபத்து

தொடர்ந்து அகமதாபாத் விமான விபத்து குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆண்டவன் அருளால் இனிமேல் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.