தமிழ்த்திரை உலகில் சிவாஜியை நடிகர் திலகம் என்பர். அவரது இயற்பெயர் விசி.கணேசன். எப்படி சிவாஜி ஆனார்னு பார்க்கலாமா…
விசி.கணேசன் சிவாஜி கணேசன் ஆவதற்கு முக்கிய காரணம் அறிஞர் அண்ணா எழுதிய இந்து கண்ட சாம்ராஜ்யம் என்ற நாடகம்தான். அந்த நாடகத்தில் சிவாஜி கணேசனின் மிகச்சிறப்பான நடிப்பாற்றலைப் பார்த்து தான் தந்தை பெரியார் சிவாஜி கணேசன் என்று பெயர் சூட்டினார்.
ஆனால் சிவாஜி என்ற பெயர் கிடைக்கக் காரணமாக இருந்தது 2 நடிகர்கள். சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் என்ற நாடகத்தில் முதலில் நடிக்க இருந்தது எம்ஜிஆர். அவர் நடிக்க மறுத்த காரணத்தால் தான் சிவாஜிக்கு அந்த நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதனால்தான் சிவாஜிக்கு அந்தப் பட்டம் கிடைத்தது என்பது ஒரு சில ரசிகர்களுக்குத் தெரிந்து இருக்கக்கூடும். அப்படி அந்தப் பட்டம் சிவாஜிக்குக் கிடைக்க காரணமான இன்னொரு நடிகர் எஸ்வி.சுப்பையா. சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் எம்ஜிஆர் நடிக்க மறுத்ததும் எஸ்வி.சுப்பையாவைத் தான் இயக்குனர் பிவி. நாராயணசாமி அணுகினார்.
அப்போது நீங்க சாமி இல்லைன்னு சொல்கிற இயக்கம். அதனால உங்க இயக்கத்துல அந்த நாடகத்துல நடிக்க மாட்டேன் என மறுத்து விட்டார் எஸ்வி.சுப்பையா. அந்த நாடகத்துல அவர் மட்டும் நடித்து இருந்தால் சிவாஜிக்கு அந்தப் பட்டம் போய்ச் சேர்ந்து இருக்குமாங்கறது கேள்விக்குறிதான்.மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.