வேளச்சேரி காந்தி சாலை பகுதியில் செயல்பட்டு வந்த சந்துரு லா அகாடமியில் தொழில்முறை போட்டியில் நடந்த அடிதடியில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
சென்னை வேளச்சேரி காந்தி சாலை பகுதியில் செயல்பட்டு வந்த சந்துரு லா அகாடமியில் 10.06.25 அன்று இரவு சுமார் 8.30மணி அளவில் இந்த பயிற்சி மையத்தில் பயின்று வந்த மூவர் தன்னுடைய நண்பருடன் இணைந்து 12க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் அகாடமிக்கு வந்து அகாடமியின் இயக்குனரிடம் வாக்குவாதம் செய்து அடிதடியில் ஈடுபட்டு அவருடைய செல்போன், கார், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து கொண்டு அகாடமியின் பெண் ஊழியரையும் தரக்குறைவான வார்த்தையில் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
இது சம்பந்மாக காவல்துறை 100க்கு தகவல் அளித்த நிலையில் ஒரு காவலர் மட்டும் நேரடியாக வந்து இது கிரைம் சம்பந்தமான வழக்கு எனவும் நேரடியாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கூறவும் என்று கூறி சென்று விட்டார். இது சம்பந்தமாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் ஆய்வாளரும், துணை ஆய்வாளரும் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.
சம்பந்தப்பட்ட சந்துருவுக்கு ஆதரவாக சோசியல் ஜஸ்டிஸ் பார் இண்டர்நேஷனல் ஆன்டி கரப்ஷன்( ம) சிவில் ஹியூமன் ரைஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா டாக்டர். சாம் பிரவீன் கூறுகையில் இது தொழில்முறை போட்டி மற்றும் அகாடமி பங்குதாரராக இருந்த ஒருவர் இதுபோன்ற செயலை செய்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.
இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் ஏற்காமல் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் என்றும் கூறி வருகின்றனர். இது சம்பந்தமாக சென்னை கமிஷனருக்கும், அடையார் டிசிக்கும், கிண்டி ஏசிக்கும் புகார் அனுப்பிய நிலையில் எந்தவித விசாரணையும் நடத்தவில்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்பதற்கு சாட்சியாக சட்டம் சம்பந்தமான தனியார் பயிற்சி மையத்தில் இப்படி நடந்திருப்பது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். உடனே காவல்துறை பாதிக்கப்பட்ட நபருக்கும் நஷ்ட ஈடும், இந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையும் வழங்க வேண்டும். இது இயலாத நிலையில் நாங்கள் இதை வேறு விதமாக பார்த்துக்கொள்வோம் என்றார் .உடன் சந்துரு லா அகாடமியின் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் உடனிருந்தார்.