சாலையில் ரத்தம் கசிந்தபடி கிடந்த மர்மமான முறையில் இறந்து கிடந்த கொத்தனார்.. என்ன தான் நடந்துச்சு?… அதிர்ச்சி சம்பவம்…!!!
SeithiSolai Tamil June 18, 2025 01:48 PM

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியில் கண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அதாவது இவர் சேசியன்காடு பேருந்து நிறுத்தத்தில் பின் தலையில் ரத்தம் கசிந்தவாறு சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை யாரும் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பதை குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.