கர்நாடகத்தை தட்டிக் கேட்க வக்கில்லாதவர் ஸ்டாலின்! ஆக.. பதநீரில் சக்கரை இருக்கா? கடுமையாக விமர்சித்த அதிமுக!
Seithipunal Tamil June 19, 2025 06:48 AM


திமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பழ­னி­சா­மி­தான் போலி விவ­சாயி! காவிரி உரி­மையை நிலை­நாட்­டா­த­வர் பழ­னி­சாமி. மூன்று வேளாண் துரோக சட்­டங்­களை ஆத­ரித்­த­வர் பழ­னி­சாமி.

"விவ­சா­யி­கள் கடனை ரத்து செய்ய மாட்­டேன்” என்று சொல்லி உச்­ச­நீ­தி­ மன்­றம் வரை போன­வர் பழ­னி­சாமி. இத்­த­கைய அர­சி­யல் ‘களை’ தான் பழ­னி­சாமி. இக்‘­களை’, வரும் தேர்­த­லில் முழு­மை­யாக அகற்­றப்­பட வேண்­டும்" என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுக ஐடி விங்க், "ஆக.. பதநீரில் சக்கரை இருக்கா"ன்னு கேட்ட பொம்மையை தலைவரா வெச்சிட்டு உங்களுக்கு இந்த பேச்செல்லாம் தேவையா?

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வழி வகுத்தவர் எடப்பாடியார்.

ஒரு விவசாயியாக, தமிழ்நாட்டு விவசாயிகளை எது பாதிக்கும் எது பாதிக்காது என்பதை நன்கு அறிந்து, விவசாயிகளை பாதிக்காத சட்டங்களை மட்டும் ஆதரித்தவர் விவசாயகாவலர் எடப்பாடியார்

ஆனால், காவிரி- மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்தை தட்டிக் கேட்க வக்கில்லாதவர் ஸ்டாலின்.

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டவர் ஸ்டாலின்.

விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத, கரும்பு காட்டில் கான்க்ரீட் ரோடு போட்டு போட்டோஷூட் நடத்தியவர் தான் ஸ்டாலின்.

இத்தகைய அரசியல் "களை" தான் ஸ்டாலின்.

இக்"களை" வரும் 2026 தேர்தலில் மக்களால் பிடுங்கி எரியப் படுவது உறுதி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.