திமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "பழனிசாமிதான் போலி விவசாயி! காவிரி உரிமையை நிலைநாட்டாதவர் பழனிசாமி. மூன்று வேளாண் துரோக சட்டங்களை ஆதரித்தவர் பழனிசாமி.
"விவசாயிகள் கடனை ரத்து செய்ய மாட்டேன்” என்று சொல்லி உச்சநீதி மன்றம் வரை போனவர் பழனிசாமி. இத்தகைய அரசியல் ‘களை’ தான் பழனிசாமி. இக்‘களை’, வரும் தேர்தலில் முழுமையாக அகற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுக ஐடி விங்க், "ஆக.. பதநீரில் சக்கரை இருக்கா"ன்னு கேட்ட பொம்மையை தலைவரா வெச்சிட்டு உங்களுக்கு இந்த பேச்செல்லாம் தேவையா?
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வழி வகுத்தவர் எடப்பாடியார்.
ஒரு விவசாயியாக, தமிழ்நாட்டு விவசாயிகளை எது பாதிக்கும் எது பாதிக்காது என்பதை நன்கு அறிந்து, விவசாயிகளை பாதிக்காத சட்டங்களை மட்டும் ஆதரித்தவர் விவசாயகாவலர் எடப்பாடியார்
ஆனால், காவிரி- மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்தை தட்டிக் கேட்க வக்கில்லாதவர் ஸ்டாலின்.
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டவர் ஸ்டாலின்.
விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத, கரும்பு காட்டில் கான்க்ரீட் ரோடு போட்டு போட்டோஷூட் நடத்தியவர் தான் ஸ்டாலின்.
இத்தகைய அரசியல் "களை" தான் ஸ்டாலின்.
இக்"களை" வரும் 2026 தேர்தலில் மக்களால் பிடுங்கி எரியப் படுவது உறுதி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.