இன்று ஜூன் 19ம் தேதி, பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், சென்னை சென்டிரல் - சூலூர்பேட்டை இடையே 27 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று ஜூன் 19ம் தேதி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி சென்னை சென்டிரலில் இருந்து இன்று காலை 8, 8.35, 9, 9.30,10.30, 10.15, மதியம் 11.35, 12.10, 1.5 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதே போல கும்மிடிப்பூண்டி சூலூர்பேட்டையில் இருந்து காலை 9.55, 11.25,11.45, மதியம் 12, 1, 2.30, 1,15, 3.10, 3.15 மதியம் இரவு 9 மணிக்கு மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40, மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.