நாட்டில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மொபைல்போன் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு டிஜிட்டல் ஸ்கேம் செய்கின்றனர். தற்போது குற்ற செயல்களில் ஈடுப்பட்டுள்ளீர்கள் என போலியாக கூறி, உங்களை கைது செய்கிறோம் என கூறி, மர்ம நபர்கள் பொது மக்களிடம் பணம் பறித்து வருகின்றனர்.
இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளையும், விழிப்புணர்களையும் ஏற்படுத்தி வருகின்ற நிலையில், மேலும் ஊதிய புதிய மோசடியாளர்கள், புதுப்புது ஐடியாக்கள் மூலம் பணம் பறித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த 62 வயது மூதாட்டியிடம், பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக மிரட்டி ரூ.22 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள கிர்கோன் பகுதியில் 64 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவரிடம் மர்ம நபர்கள் கடந்த 05ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தொலைபேசியில் அழைத்து மிரட்டி உள்ளனர்.
அவர்கள் தங்களை தாங்கள் டில்லி பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் காஷ்மீர் போலீசார் என் காட்டிக்கொண்டு பேசி மிரட்டி உள்ளனர். அத்துடன், அந்த மூதாட்டியை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி அச்சுறுத்தி உள்ளனர். இதற்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
இதனால் செய்வதறியாது பயந்து போன அந்த மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனை நம்பி அவர்கள் கூறிய பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு ரூ.22.4 லட்சம் பணத்தை அந்த மூதாட்டி அனுப்பியுள்ளார். அதன் பின்னர் அந்த மர்ம நபர்கள் அவரை தொடர்பு கொள்ளவில்லை.
தான் ஏமாற்றப்பட்டது பின்னர் மூதாட்டிக்கு தெரிய வர, இது குறித்து அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக கூறி ஏமாற்றுவது இந்தியாவில் இது முதல்முறை என போலீசார் தெரிவித்துள்ளனர்.