பவானியில் தூய்மை பணியாளர்களுக்கு விருந்து! காரணம் தெரியுமா?
Top Tamil News June 19, 2025 02:48 PM

பவானி நகராட்சி நிர்வாகம் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக  பவானி நகர மன்ற திமுக உறுப்பினர்கள் விருந்து வைத்து கொண்டாடினர்.

பவானி நகருக்கு தமிழக முதல்வர் 11.05.2025 அன்று வருகை புரிந்ததையொட்டி சிறப்பாக பணி புரிந்த பவானி நகராட்சி நிர்வாகம் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக  பவானி நகர மன்ற திமுக உறுப்பினர்கள் மோகன்ராஜ், கார்த்திகேயன், சந்தோஷ் குமார், சாரதா சுரேஷ், விஜய் ஆனந்த், பாரதிராஜா, சுமதி கணேஷ்,  ரவி, கவிதா உதயசூரியன், கோகிலாம்பாள் ஏற்பாடு செய்திருந்த விருந்து உபசரிப்பு விழா (இன்று 18.06.2025) ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் தோப்பு ND. வெங்கடாசலம் தலைமையில் இனிதே நடைபெற்றது. இதில் பவானி சட்டமன்ற பொறுப்பாளர் SLT.சச்சிதானந்தம்  மற்றும் பவானி நகர கழக செயலாளர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் வடிவேலு, சந்திரா,  கஜலட்சுமி, ரசியா பேகம் மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள் ஜெகதீசன், கனகராஜ், நாகராஜ், தனக்கோடி, வெங்கடேசன், பாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.