9-ஆம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி, திருட்டுத் தனமாக திருமணம் செய்த நபர்
Top Tamil News June 20, 2025 01:48 AM

கூடுவாஞ்சேரியில் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி (வயது 31). என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் நீண்ட நாட்களாக ஆசை வார்த்தையுடன் பேசி திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். பின்பு இது சம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியின் வழக்கு என்பதால் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்தனர். அங்கு விசாரித்த மகளிர் போலீசார் சம்பவம் நடந்ததை உறுதி செய்தனர் பின்பு சரிதர பதிவேடு குற்றவாளியான நவமணி (வயது 31) என்பவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். நவமணி மீது கொலை வழக்குகள் உட்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து வாழ்ந்து வந்த நபர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.