சிங்கப்பெண்ணே: லேடீஸ் ஆஸ்டலில் காயத்ரி ஆனந்தியிடம் 'நீ அன்புவை விட்டுக்கொடுக்குறேன்னு துளசியிடம் முடிவெடுத்தது ரொம்ப தப்பு'ன்னு சொல்கிறாள். 'யாருக்குமே தெரியாம ஆஸ்பிட்டல் போய் அன்புவைப் பார்த்துட்டு வந்தா. அப்போ இன்னும் காதல் இருக்குன்னு தானே அர்த்தம்' என்கிறாள் ரெஜினா. 'அன்பு வரலன்னா என்னாச்சு? ஏன்னு என் உசுரை எடுத்துடுவா' என்கிறாள் சௌந்தர்யா.
'இன்னும் லூசுத்தனமா முடிவெடுக்காத. அன்பு வாழ்க்கை கெட்டுப் போகக்கூடாதுன்னு நினைக்கிறியே. உன் வாழ்க்கை கெட்டுப் போனா அன்பு உன்னை விட்டுட்டுப் போயிடுவாரா. எங்களைக் கேட்காம இப்படி ஒரு முடிவை எடுத்து துளசிகிட்ட பேசுனதே தப்பு' என்கிறாள் ரெஜினா. 'இயல்பை ஏத்துக்கிட்டு யதார்த்தத்தைப் புரிஞ்சிக்கிட்டு வாழக் கத்துக்கோ'ன்னு காயத்ரி ஆனந்தியிடம் சொல்கிறாள். 'என்ன தான் அன்புவை நான் விட்டுக் கொடுக்குறேன்னு சொன்னாலோ என்னால அன்புவை மறக்கவோ என்னை மாத்திக்கவோ முடியல.
எல்லா வலியையும், வேதனையையும் எனக்குள்ளே புதைச்சிக்கிறேன். கூடிய சீக்கிரமே அன்பு விஷயத்துல இருந்து மனசளவிலயும் வெளியே வந்துடுவேன்' என்கிறாள் ஆனந்தி. எல்லா விஷயத்தையும் அன்பு அண்ணன்கிட்ட நான் சொல்லிருக்கணும். இவ தான் மொட்டை மாடியில இருந்து குதிச்சிடுவேன்னு பிளாக்மெயில் பண்றாளே என ஆதங்கப்படுகிறாள் சௌந்தர்யா. நல்ல டாக்டரா பார்த்து உன்னோட பிரச்சனையைன்னு ரெஜினா ஆனந்திக்கு ஐடியா கொடுக்கிறாள். அப்போது ஆனந்திக்கு வாந்தி வர பாத்ரூமுக்கு ஓடுகிறாள்.
அந்த சத்தம் கேட்டு வார்டன் அங்கு வருகிறார். அப்போது ரெஜினா வெளியே வந்ததும் வார்டன் 'நீ ஏன் வாமிட் எடுத்தே'ன்னு கேட்கிறாள். 'நல்ல வேளை சமாளிச்சிடுவோம்'னு நினைக்கிறாள் ரெஜினா. 'எதுக்காக திடீர்னு வாந்தி எடுத்தே'ன்னு கேட்கிறாள். 'மதியம் சாப்பிடும் சாப்பாடு செட்டாகலன்னு நினைக்கிறேன்'னு ரெஜினா சொல்கிறாள். 'நாங்க தரமான பொருளாகத் தான் வாங்கிக் கொடுக்கிறோம்.
அதெப்படி வாமிட் ஆகும்'னு வார்டன் கேட்க 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே மேடம்'னு ரெஜினா சமாளித்தபடி ரெஸ்ட் எடுக்கிறேன்னு எஸ்கேப் ஆகிறாள். காயத்ரி நீ மட்டும் தான் வாரே. ஆனந்தியை எங்கேன்னு பதற்றப்படுகிறாள். வாந்தி எடுத்ததை வார்டன் பார்த்துட்டாங்க என்கிறாள் ரெஜினா. ஆனந்தி எனக்காக நீ ஏன் சொல்றே ரெஜினான்னு கேட்கிறாள்.
வார்டன் மேடம் சொன்னதைப் பார்த்தா உங்கிட்ட சந்தேகப்பட்டு பேசுன மாதிரி இருந்ததுன்னு ஆனந்தி சொல்கிறாள். வார்டனா பொறுப்போடு அவங்க கேட்டுருக்கலாம். ஆனா ஆனந்தி தான் வாந்தி எடுத்தான்னு தெரிஞ்சா தான் பிரச்சனை ஆகும் என்கிறாள் ரெஜினா. உனக்குள்ள பிரச்சனையை உடனே தீர்க்கப் பாரு என்றும் ஆனந்திக்கு அட்வைஸ் பண்ணுகிறாள்.
அதே நேரம் அன்புவின் அம்மா லலிதா 'அன்புவுக்கு துளசி தான் கட்டிக்கப்போற பொண்ணு'ன்னு துளசியின் அப்பா, அம்மாவிடம் சொல்கிறாள். அதைக் கேட்டு துளசியின் அம்மா சந்தோஷம் கொள்ள அப்பாவோ அதை மறுக்கிற மாதிரி பேசுகிறார். 'நீங்க ஏன் இப்படி பேசுறீங்க? அண்ணி சரியாகத் தான் முடிவை எடுத்திருக்காங்க'ன்னு துளசியின் அம்மா சொல்கிறாள்.
'நான் யோசித்து நிதானமாகத் தான் இந்த முடிவை எடுத்திருக்கேன்' என்கிறாள் அன்புவின் அம்மா. என்னைக்கு என் பிள்ளைக்கு வேறொரு பொண்ணை கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னாளோ அப்பவே அவள் மனசுல என் பையன் இல்லன்னு தெரியுது. அந்த ஆனந்தியை நான் நம்புனேன். ஆனா என்னை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து விட்டுட்டா. நான் மருமகளேன்னு கூப்பிட்டேன். என் புள்ளைக்கு அடிபட்டதுன்னதும் அவள் வந்தாளா? நானே வரக்கூடாதுன்னு சொன்னாலும் அவ வந்துருக்கணும். ஆனா துளசி வந்தாள்ல.
அதனால இந்தக் கல்யாணம் கண்டிப்பா நடக்கணும். இது நடக்கலன்னா அன்பு அந்த ஆனந்தியை நினைச்சி உருகிக்கிட்டே இருப்பான் என்கிறாள் அன்புவின் அம்மா. உடனே துளசியின் பெற்றோரும் ஒருவழியாக இதற்கு சம்மதிக்கிறார்கள். கல்யாண வேலையைப் பாருங்கன்னு சொன்னதும், நான் நாள் குறிச்சிடுறேன் என்று சொல்கிறாள் அன்புவின் அம்மா.
ஆஸ்டலில் எல்லாரையும் அசெம்பிள் ஆகச் சொல்கிறார் வார்டன். மித்ராவிடம் உனக்கு ஏதாவது தெரியுமான்னு அவரது தோழிகள் கேட்கின்றனர். வார்டனுக்கு ஜால்ரா அடிக்கிற அவங்களுக்கே தெரியலன்னா நமக்கு எப்படி தெரியும் என்கிறாள் மித்ரா.
'நான் ஒரு வார்டனா இந்த ஆஸ்டல்ல ரொம்ப கண்டிஷனோடு நடந்துருக்கேன். எல்லா அம்மாவும் பிள்ளைங்க மேல வெறும் பாசத்தை மட்டும் காட்ட மாட்டாங்க. கண்டிப்பையும் காட்டுவாங்க. அப்படித்தான் நானும் இருந்துருக்கேன். கல்யாணம் ஆனவங்களுக்கு ஒரு மெச்சுரிட்டி இருக்கும். அவங்களுக்கு ஒரு ஃபோகஸ் இருக்கும். ஆனா கல்யாணம் ஆகாதவங்க தான் இங்கே நிறைய பேரு இருக்காங்க. நான் அவங்களுக்காக ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பேன்.
நான் ஸ்ட்ரிக்ட்டா இருப்பேன்கறதால தான் இங்கே கொண்டு வந்து எல்லாரையும் சேர்க்குறாங்க. என்னை அம்மாவா தான் நினைக்கிறீங்களான்னு கேட்கிறார் வார்டன். நான் ஸ்ட்ரிக்டா இருக்குறது மத்தவங்களுக்குத் தப்பாகத் தான் தெரியும். நான் தப்பாத் தான் நினைப்பேன்னா அவங்களுக்காகத் தான் சொல்றேன்னு நினைச்சிக்கோங்க' என்கிறார் வார்டன். அப்போது ஆனந்தி நம்மைத் தான் வார்டன் குத்திக் காட்டுகிறாரோ என்று தலைகுனிந்து யோசிக்கிறாள்.