திருமண ஆசை காட்டி பெண்ணுடன் வாலிபர் உல்லாசம்..கடைசியில் நடந்த அதிர்ச்சி!
Seithipunal Tamil June 20, 2025 11:48 AM

திருமண ஆசை காட்டி பெண்ணுடன்  வாலிபர் உல்லாசமாக இருந்த வீடியோவை எடுத்து அந்த பெண்ணை மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவைச் சேர்ந்த பெண்  ஏற்கனவே திருமணமாகி கணவனிடம் விவாகரத்து பெற்று பெங்களூரில் தனியாக வசித்து வந்தார். அந்த பெண்ணுடன் பெங்களூரு காடுகோடியை சேர்ந்த 30 வயதான சீனிவாஸனுக்கு பழக்கம் ஏற்பட்டது.  

இதையடுத்து 2 பேரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், சீனிவாஸ் அந்த பெண்ணிடம் திருமண ஆசை காட்டி உல்லாசம் பலமுறை அனுபவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணுடம் உல்லாசமாக இருந்ததை செல்போனில் சீனிவாஸ் வீடியோ எடுத்து வைத்து அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி அவர் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டி வந்தார்.

இதனால் பயந்து போன அந்த பெண் சீனிவாசுக்கு தங்க நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாயை  கொடுத்துள்ளார். இருப்பினும் சீனிவாசின் தொடர்ந்து மிரட்டல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். . இதையடுத்து அந்த பெண் காடுகோடி போலீசில் சீனிவாஸ் மீது புகார் அளித்தன்பேரில், காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் சீனிவாசை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.